
ஈரோடு: வீட்டில் இருந்தவாறு வேலை வாய்ப்பு எனக்கூறி, வங்கிக்கணக்கு, ஆதார் எண் விவரங்களைக் கோரும் மோசடிகும்பலிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என ஈரோடு சைபர் க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த இளைஞர், சைபர் க்ரைம் போலீஸில் அளித்த புகாரில், நான் செல்போன் செயலி மூலம், எனது ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றைக் கொடுத்து ரூ.3,500 கடன் பெற்றேன். 7 நாட்களுக்குள் ரூ.5000-த்தை திருப்பிச் செலுத்தி விட்டேன். இருப்பினும், மேலும் பணம் செலுத்தாவிட்டால், உங்கள் புகைப்படத்தை மார்பிங் செய்து, உங்கள் செல்போன் தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டுவதாக’ தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UrO4lgS
0 Comments