
சென்னை: ஏரியா தகராறில் ரவுடியை கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த சத்யராஜ் என்பவருக்கு எதிராக பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்தரப் பதிவேடு குற்றவாளியான அவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது சகோதரியோடு சென்னை உயர் நீதிமன்றம் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஏரியா தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டார். இதில் படுகாயமைடந்த சத்தியராஜ், மருத்துவமனை சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். பின்னர் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iqUGStv
0 Comments