Crime

சென்னை: சோழர் கால கோயிலில் திருடப்பட்ட 300 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் சிலையை, சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்மீட்டு, 2 பேரைக் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஞ்சநேயர் சிலை ஒன்று திருடப்பட்டதாக அப்பகுதி காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு 2020-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z32DgsY

Post a Comment

0 Comments