
திருச்சி மாவட்டம் மணப்பாறை பூமாலைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (45). எம்பிஏ பட்டதாரி. இவர்,கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் கணக்கு பிரிவில் பணியாற்றியவர். தற்போது திருப்பூர் ஆலைகளில் இருந்து துணிகளை வாங்கி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், டெல்லி மற்றும் சென்னையிலிருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர், தமிழக போலீஸாரின் உதவியுடன் ராஜா வீட்டில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். சிறார்களின் ஆபாச வீடியோக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி லட்சக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடைபெற்றதால், அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KpAy2ZW
0 Comments