
சூரத்: குஜராத் மாநிலம் நாடியாட் பகுதியில் தனது மகளின் ஆபாச வீடியோவை இணையத்தில் பரப்பியதை தட்டிக்கேட்ட எல்லைப்பாதுகாப்பு படை வீரரை அடித்துக் கொலை செய்தது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லைப்பாதுகாப்புப்படை வீரர், மெல்ஜிபாய் வகேலா. இவர் தனது மகளின் ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்த 15 வயது சிறுவனிடம் அதுகுறித்து விசாரிப்பதற்காக அவனது கிராமான சக்லாசிக்குச் சென்றுள்ளார். சம்பவம் குறித்து சிறுவனிடம் விசாரிக்கும்போது அது வாக்குவாதத்தில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினர், வகேலாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வகேலா உயிரிழந்தார்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சக்லாசி போலீஸார் சம்பவம் தொடர்பாக, 7 பேரை கைது செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/O9RMYzA
0 Comments