
கடலூர்: திட்டக்குடியை அடுத்த மங்களூர் கிராமத்தில் உள்ள கிணற்றில் தாய், மகள் மற்றும் பேத்தி ஆகியோர் இன்று காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுருநாதன்(42) என்பவர் வெளிநாட்டில் வேலை செய்துவந்துள்ளார். இவரது மனைவி சுமதி தனது மகள்களுடன் மலையனூரில் வசித்து வந்தார். இந்த நிலையில், தனது முதல் மனைவியான சுமதி கடந்த 2016-ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இதனால் 4 வருடங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய சிவகுருநாதன், சில மாதங்கள் கழித்து சென்னையில் மருந்து கடையில் வேலைபார்க்கச் சென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/B2w8Sf6
0 Comments