
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 ஐம்பொன் சிலைகளை வைத்திருந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 பேர் ஐம்பொன் சிலைகளை விற்பனை செய்வது தொடர்பாக பேசிக்கொண்டிருந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விரைந்து வந்த கோயம்பேடு போலீஸார், சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரிக்க முயன்றனர். அப்போது இருவரும் தப்பி ஓடினர். அதில் ஒருவரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நபர் வைத்திருந்த பையில் 1.5 கிலோ எடை கொண்ட ஐம்பொன் பொன்மணி விளக்கு ஏந்திய சிலையும், 300 கிராம் எடை கொண்ட சிறிய பெருமாள் சிலையும் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/v05fU8y
0 Comments