Crime

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக கிஷோர் கே.சாமியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்தவர் கிஷோர் கே.சாமி. இவர் கடந்த அக்டோபர் 23-ம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில் வேறு ஒரு வழக்கில் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oiyKvAD

Post a Comment

0 Comments