Crime

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ளே தெத்தி சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் மாதவன் மகள் நேத்ரா நிதி(14). நாகையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது, வீட்டின் அருகேயுள்ள குளத்தின் கரையில் புத்தகப் பையை வைத்துவிட்டு, குளத்துக்குள் குதித்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த நாகை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, மாணவியை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மாணவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நாகூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TSX30Dc

Post a Comment

0 Comments