Crime

பரேலி: உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ராகேஷ் குப்தா (55). சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த இவர், சத்ரா கிராமத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ராகேஷ் குப்தாவின் வீட்டுக்குள் ஆயுதமேந்திய 4 பேர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் ராகேஷ் குப்தா, அவரது மனைவி (51), தாயார் ஆகிய மூவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தகவல் அறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஓ.பி. சிங், தடயவியல் நிபுணர்களுடன் அIங்கு விரைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xYDtEbC

Post a Comment

0 Comments