
திருப்பூர்: பல்லடத்தில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனை மற்றும் மருந்தகத்துக்கு சுகாதாரத் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
பல்லடம் மாணிக்காபுரம் சாலையில், பிடிஓ காலனியில் செயல்பட்டு வந்த மருத்துவமனையில், திருப்பூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கனகராணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு மருத்துவராக இருந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ண ஆனந்த் விஸ்வாஸ் (41) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பிளஸ் 2 மட்டுமே படித்த அவர், கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவமனையை நடத்தி வருவதும், மூல நோயாளிகளுக்கு ரூ. 20ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை வசூலித்து சிகிச்சை அளித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/e4HIREh
0 Comments