
மதுரை: சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, சரண்யா(எ)கலைச்செல்வி, குமுதவல்லி ஆகியோர் புத்தாடை மற்றும் அழகு சாதனப் பொருட்கள் வாங்கித் தருவதாகக் கூறி 2017-ல் திருப்பூருக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த சிறுமிக்கு போதை மாத்திரைகளை கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். சிறுமியின் பெற்றோர் தனது மகளைக் காணவில்லை என கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர். போலீஸாருக்கு சிறுமி திருப்பூரில் இருப்பது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lzxmA0S
0 Comments