Crime

திருவனந்தபுரம்: அடுத்தடுத்த கொலைகளால் அதிர்ந்து போயுள்ளது கடவுளின் தேசமான கேரளம். இம்மாத தொடக்கத்தில், நரபலி என்ற பெயரில் இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொன்று அவர்களின் நர மாமிசத்தை சமையல் செய்து சாப்பிட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த வாரம் பாலூர் என்ற இடத்தில் காதலை ஏற்க மறுத்ததால் 23 வயது பெண்ணை அவரது நண்பனே கொலை செய்த சம்பவம் தெரிந்தது.

இதோ ஒரு வாரத்திற்குள் மூன்றாவது கொலை . இம்முறை திருவனந்தபுரம் பாறசாலை என்ற இடத்தில் கொலை சம்பவம். கொல்லப்பட்டது 23 வயது இளைஞன் ஷாரோன் ராஜ். விஷம் கொடுத்து கொன்றது ஷாரோன் உயிருக்கு உயிராக காதலித்த காதலியான களியக்காவிளை ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா. இந்தக் கொலையும் கொலைக்கு முன் பின் நடக்கும் சம்பவங்களும் கேரளத்தை ஒரு க்ரைம் மோடிலேயே வைத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/B9WJqaS

Post a Comment

0 Comments