Crime

குருகிராம்: தலைநகர் டெல்லியின் குருகிராம் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை 48-இல் அந்த பெண்ணின் உடல் இருந்துள்ளது.

கொல்லப்பட்ட பெண்ணின் வயது 20 என்றும். அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2021-இல் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. அவரது கணவர் குருகிராம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அதனால் திருமணத்திற்கு பிறகு தம்பதியர் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/K43nua5

Post a Comment

0 Comments