
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மின்கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சிறுமியின் உடல் சித்திரவாடி மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், மயானத்தில் பூஜை செய்து புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலில் இருந்து தலையை எடுத்து சென்ற மர்மநபர்களை, சித்தாமூர் போலீஸார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த சித்திரவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கிருத்திகா (12). 6-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறையில் அவுரிமேடு கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது, கடந்த 5-ம் தேதி வீட்டு முன்பு உள்ள சாலையில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியின் வார்டு உறுப்பினர் மூலம் மின் கம்பத்தில் பழுதடைந்திருந்த தெருமின் விளக்கை சரிசெய்ய முயன்றபோது, ஏற்கெனவே சேதமடைந்திருந்த மின்கம்பம் சாய்ந்து கீழே இருந்த சிறுமியின் மீது விழுந்து படுகாயமடைந்தார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி சிகிச்சை பலனின்றி கிருத்திகா உயிரிழந்தார். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு கடந்த 15-ம் தேதி சித்திரவாடி பகுதியில் உள்ள மயானத்தில் உடல் புதைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/g1NUhZi
0 Comments