
போபால்: கூகுள் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் நபரை வலுக்கட்டாயமாக கடத்தி, பெண் ஒருவருடன் கட்டாய திருமணம் செய்யப்பட்டு, மிரட்டப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்ததன் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள கம்லா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த குற்ற செயல் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் பெயர் கணேஷ் சங்கர். அவர் பெங்களூருவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் மூத்த மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். அவர் ஷில்லாங் நகரில் உள்ள ஐஐஎம் கல்விக் கூடத்தில் எம்பிஏ படித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KMb4mfY
0 Comments