Crime

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே விசாரணைக்காக பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியது தொடர்பாக, ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி, காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள காசிலிங்கபுரத்தை சேர்ந்தவர் பாப்பா(49). இவரது கணவர் இறந்துவிட்டார். கடந்த 2.11.2007 அன்று, அந்த பகுதியில் நடந்த திருட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அப்போதைய புளியம்பட்டி காவல் ஆய்வாளர் விமல்காந்த், உதவி காவல் ஆய்வாளர் காந்திமதி பாப்பாவை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZAsC6VT

Post a Comment

0 Comments