
சென்னை: சென்னை, சிந்தாதிரிப்பேட்டை கலவை செட்டித் தெருவைச் சேர்ந்தவர் வி.பாரதி. இவர் நேற்று முன்தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ‘தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி பெற்றுத் தருவதாக கூறி தன்னிடம் ரூ.77 லட்சம் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளேன்.இதே பகுதியில் திமுக கவுன்சிலராகவும் இருந்துள்ளேன். இந்நிலையில், வேலூரைச் சேர்ந்த எப்ரின் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் வேலூரைச் சேர்ந்த புவனேஷ் என்ற சரவணன், அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zAmsZKT
0 Comments