
திருவண்ணாமலை: ஆரணி விஏகே நகரில் வசித்தவர் வெற்றிவேல்(42). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ரேவதி (32). இவருக்கும், ஆரணி அடுத்த காமக்கூர்பாளையம் கிராமத்தில் வசிக்கும் நாகராஜ்என்பவருக்கும் ‘கூடா நட்பு’ இருந்துள்ளது. இதனை, வெற்றிவேல் கண்டித்துள்ளார்.
இதற்கிடையில், விபத்தில் சிக்கிய வெற்றிவேல் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து, கடந்த 5-ம் தேதி வீடு திரும்பியுள்ளார். பின்னர் அவர், வீட்டில் நேற்று முன் தினம் காலை மயங்கி கிடந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வெற்றிவேல் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VL7MxPy
0 Comments