
புதுச்சேரி முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகரில் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலை மையிலான போலீஸார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்குபாலியல் தொழில் நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்துஅங்கிருந்த ரெட்டியார்பாளை யத்தைச் சேர்ந்த புரோக்கர் அந் தோனி (39) என்பவரை போலீஸார் பிடித்தனர். மேலும் அங்கிருந்த 4 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில், பிடிபட்ட அந்தோனி வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரது வீட்டை வாடகைக்கு எடுத்து வார இறுதி நாட்களில் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/odug3ep
0 Comments