
சேலம்: சேலம் மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையிட்டு ரூ.25 ஆயிரத்து 200 பணத்தை பறிமுதல் செய்து, லஞ்சம் கொடுக்க வந்த மூவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் சூரமங்கலமத்தில், மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில், அங்கீகாரம் தர லஞ்சம் கேட்பதாக சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர்கள் நரேந்திரன், ரவிச்சந்திரன், ரவிக்குமார் உள்ளிட்ட குழுவினர் நகர ஊரமைப்பு அலுவலகத்தில் நேற்று மாலை சோதனை செய்னர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GMk7UqT
0 Comments