
தாம்பரம்: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை கண்டெய்னர்களில் இருந்து நூதன முறையில் திருடி வந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.75 கோடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக தனிப்படை போலீஸாருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
தாம்பரம் சானடோரியத்தில் மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் இயங்கி வருகிறது. இங்குள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து ஆக. 18-ம் தேதி, 14,400 கிலோ மருந்து பொருட்கள் கண்டெய்னர் லாரி மூலம் ஜெர்மன் நாட்டுக்கு அனுப்பப்பட்டன. இதனிடையே கண்டெய்னர் லாரியில் இருந்து நூதன முறையில் பொருட்கள் திருடப்படுவதாக நிறுவனத்துக்கு தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SKls7nh
0 Comments