
சென்னை: தொழிலாளி ஒருவர் 3-வது மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 3 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வேளச்சேரி, தண்டீஸ்வரம், 10-வது தெருவில், தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அங்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி ஆனந்தன் (22) மாடியிலிருந்து தவறி விழுந்து பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து வேளச்சேரி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில்,ஆனந்தன் மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: உயிரிழந்த ஆனந்தனுடன் சென்ட்ரிங் தொழிலாளர்களான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் (25), பிரசாந்த் (25), கொத்தனார் சீனிவாசன் (25) ஆகியோர் வேலை செய்துள்ளனர். அப்போது மேஸ்திரி வேலை செய்த ஆறுமுகம் என்பவர், ஆனந்தனை விட சக்திவேல் மற்றும் பிரசாந்துக்கு 100 ரூபாய் கூலி குறைவாகக் கொடுத்துள்ளார். இதனால், அவர்களுக்குள் ஒரு வாரமாகத் தகராறு இருந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vKAmzWN
0 Comments