
திருச்சியில் இருந்து உதகைக்கு வந்த 2 வியாபாரிகளை அரிவாளால் வெட்டி ரூ.30 லட்சம் ரொக்கத்துடன் தப்பிச் சென்ற நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (55). இவரது மகன் யுவராஜ் (25). இருவரும் உதகையில் இருந்து திருச்சிக்கு காய்கறி அனுப்பும் வியாபாரிகளுக்கு சேர வேண்டிய பணத்தை வசூல் செய்து, ஞாயிற்றுக்கிழமை உதகைக்கு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இதற்கு அவர்களுக்கு கமிஷன் வழங்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r1YJkd0
0 Comments