
சென்னை: கள்ளக்குறிச்சி சிவன் கோயிலில் திருடுபோன சோழர்கால பஞ்சலோக சிலைகள் அமெரிக்காவில் இருப்பதை, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். 900 ஆண்டுகள் பழமையான அந்த சிலைகளை மீட்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தில் திரிபுராந்தகம், திரிபுரசுந்தரி மற்றும் நாரீஸ்வர சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த 6 பஞ்சலோக சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன் திருடுபோனது. இதுதொடர்பாக 2018-ல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9DbxrZe
0 Comments