
பெங்களூரு: கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கனககிரி அருகேயுள்ள ஹூலித‌ர் கிராமத்தை சேர்ந்த 25 வயதான இந்து இளைஞர் அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதான‌ முஸ்லிம் பெண்ணை காதலித்தார். இருவரும் கடந்த 10-ம் தேதி கிராமத்தை விட்டு வெளியேற முயன்றனர். இந்த விவகாரத்தால் இருவரின் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட‌ வாக்குவாதம் மோதலாக மாறியது.
நேற்று முன்தினம் மாலை நடந்த மோதலில் ஒருவர் மற்றவரை கற்களாலும், கம்புகளாலும் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த‌ யாங்கப்பா தல்வார் (60), பாஷாவலிசாப் மலிகாடி (22) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். தர்மண்ண ஹரிஜன் (20) உள்ளிட்ட 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் குல்பர்கா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/o5qJlyt
0 Comments