Crime

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் திண்டுக்கலைச் சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் திருச்செங்கோடு நெய்காரன்பட்டியைச் சேர்ந்த திருமணமான பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஓ.சுரேஷ் (35), பி.சுப்பிரமணி (50). இருவரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பிரிவு அருகில் இருவரும் சென்றபோது எதிரே திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சேர்ந்த சிவசக்தி நகரைச் சேர்ந்த ஆர்.ராமகிருஷ்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lTaFCiB

Post a Comment

0 Comments