Crime

ராமநாதபுரம்: திருப்புல்லாணி அருகே இலங்கைக்கு கடத்த இருந்த பல கோடி மதிப்புள்ள சுறா பீலி, கடல் அட்டைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சல்லித்தோப்பு கடற்ரைபகுதியில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கியூ பிரிவு போலீஸார் அப்பகுதிக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள தென்னந்தோப்பு ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட சுறா மீன் பீலிகள் (சுறா துடுப்பு) மற்றும் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் ஆகியவை மூட்டை மூட்டையாக ஒரு நாட்டுப் படகில் பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YcZUfzo

Post a Comment

0 Comments