
தேனி: தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க தமிழக காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. அதனடிப்படையில், கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்தும் சொத்துக்கள், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.
இது மட்டுமின்றி உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் சில வரையறுக்கப்பட்ட மருந்துகளை போதைக்காக சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்பவர்கள்மீதும் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் தனிப்படையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதைக்கென பயன்படுத்தும் ஊக்க மருந்துகளை பேருந்தில் கடத்துவது குறித்த தகவல் அறிந்து தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NvdJ0c6
0 Comments