Crime

சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கியின் நிதி நிறுவனத்தில் 481 வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 31.7 கிலோ தங்க நகைகள் கடந்த 13-ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை தொடர்பாக அரும்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படை அமைத்து, கொள்ளை கும்பலை கைது செய்தனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பத்திரமாக மீட்டனர்.

கொள்ளையடித்த நகைகளை வீட்டில் வைத்திருந்த அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wXPqr9u

Post a Comment

0 Comments