
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சட்டவிரோதமாக பணம் வைத்து சேவல் கட்டு எனப்படும் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில், போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஜமீன் காளியாபுரத்தில் லோகநாதன் என்பவரது தோட்டத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் சென்று, சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொள்ளாச்சி, வடக்கிபாளையம், கிணத்துக்கடவு, கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 14 பேரை பிடித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QjmJXdD
0 Comments