Crime

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.இலங்கையில் இருந்து வந்த 2 விமானங்களில் வந்த 3 பேர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்களை தனி அறையில் பரிசோதனை செய்ததில், மலக்குடலில் அவர்கள் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களுக்கு எனிமா கொடுத்து தங்கத்தை வெளியே எடுத்தனர். மொத்தம் ரூ.77.24 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 705 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uDinjQM

Post a Comment

0 Comments