Crime

நன்னிலம் அருகே ஆணைக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின்பேரில், கணித ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆணைக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கார்த்திகை சாமி. இவர், அப்பள்ளியில் பயிலும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் புகார் தெரிவித்த நிலையில், அந்தப் புகார் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜனிடம் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rbDkKqX

Post a Comment

0 Comments