
சண்டிகர்: ஹரியாணாவின் நுஹ் மாவட்டம், தாவடு நகர போலீஸ் டிஎஸ்பி சுரேந்தர் சிங் தலைமையில் சட்டவிரோத சுரங்கங்களை தடுக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டிருந்தது. ஆரவல்லி மலையின் பச்காவ் பகுதியில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக அவருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸ் படையுடன் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அப்போது கற்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வேகமாக வந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தும் வகையில் போலீஸ் வாகனத்தை டிஎஸ்பி சுரேந்தர் சிங் குறுக்காக நிறுத்தினார்.
போலீஸாரை பார்த்ததும் அதிவேகமாக வந்த லாரி, போலீஸ் வாகனத்தின் மீது மோதி நிற்காமல் சென்றது. லாரி அதிவேகமாக மோத வருவதை பார்த்த ஓட்டுநர் மற்றும் போலீஸ்காரர்கள் வாகனத்தில் இருந்து குதித்து தப்பினர். டிஎஸ்பி சுரேந்தர் சிங் மட்டும் வாகனத்தில் இருந்தார். லாரி மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mePBzRU
0 Comments