Crime

இளம்பெண் கொலை வழக்கில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த நபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருப்பார்குட்டையைச் சேர்ந்தஇளம்பெண் சின்னப்பொண்ணு கடந்த 2010-ம் ஆண்டு செப்.20 அன்று அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காவல் துறையினர் நடத்தியவிசாரணையில், அதே ஊரைச் சேர்ந்தசிவா என்பவர் சின்னப்பொண்ணுவுடன்2 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாகவும், சிவாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர் என்றும், சின்னப்பொண்ணுவின் வீட்டை தனது மகள்களின் பெயருக்கு எழுதி வைக்காத ஆத்திரத்தில் சிவா, சின்னப் பொண்ணுவை அடித்துக் கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் சிவாவை கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zrOi1Iu

Post a Comment

0 Comments