Crime

புதுச்சேரியில் விபத்து வழக்கில் லட்சக்கணக்கில் நஷ்டஈடு கேட்டதால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் பாபு. இவரது இரண்டாவது மகன் விஷ்ணுகுமார் (எ) பாலாஜி (17). பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். விஷ்ணுகுமார் கடந்த மார்ச் 9-ம் தேதி பைக்கில் பத்துக்கண்ணு பகுதிக்குச் சென்றபோது, அவ்வழியே மொபட்டில் வந்த பெண் மீது இடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் அப்பெண்ணுக்கு காலில்காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில் புதுச்சேரி தெற்கு போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த துணை உதவி ஆய்வாளர் ஒருவர் இருதரப்பையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் ஏற்படாததால், வழக்குப் பதிந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DZUxvFY

Post a Comment

0 Comments