
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி பூவரசி(22). திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
பெங்களூருவில் தங்கி ஐடி துறையில் பணியாற்றும் ஜெயக்குமார், கோயில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சொந்த கிராமத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில், வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு பூவரசி நேற்று முன் தினம் இரவு தற்கொலை செய்துகொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PylnioJ
0 Comments