Crime

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலை கிராம காவல் நிலையத்தின் தனிப்பிரிவு தலைமை காவலராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் விஜய் (42). இவர், மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் வாணாபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, வாணாபுரம் காவல் நிலையத்தின் தனிப்பிரிவு தலைமை காவலராக நேற்று பொறுப்பேற்ற நிலையில், ஜமுனாமரத்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (35) என்பவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் லஞ்சப் பணத்தை காவல் நிலையம் முன்பாக வாங்கியபோது திருவண் ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன், காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் காவலர்கள் கோபிநாத், முருகன், சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1w8CcxN

Post a Comment

0 Comments