
சென்னை: பல்வேறு நாடுகளில் 40-க்கும் மேற்பட்ட போலி ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் நடத்திய கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து 188 பவுன் நகை, ரூ.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் 40-க்கும் மேற்பட்ட போலி ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் பொன்ராஜ், கெவிராஜ், டேனியல், புதுச்சேரியை சேர்ந்த பேட்ரிக்மாரி விஜயமுருகப்பா ஆகிய 4 பேரை மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர். கும்பலிடம் இருந்து 188 பவுன் நகைகள், ரூ.58 லட்சம் பணம், 2 கார்கள், கணினி, மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bxMDOJn
0 Comments