Crime

அரியலூர்: கீழப்பழுவூர் அருகே பணத்தகராறில் பெண்ணைக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியது தொடர்பாக 2 பெண்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மனைவி மாரியாயி(47). இவர், நேற்று அருங்கால் கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரியிடம் சென்று, ஒரு பெண் கொலை செய்யப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீஸாருக்கு கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி தகவல் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GYhV0To

Post a Comment

0 Comments