
அரக்கோணம்: அரக்கோணம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பக்தவச்சலம் (60). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோகிலா (57). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WHcDieK
0 Comments