Crime

பெங்களூரு: கர்நாடகாவில் கருச்சிதைவு செய்யப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ளது மூடலகி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள டவுன் பஸ் நிலையத்தில் சில டப்பாக்கள் கிடந்துள்ளன. கேட்பாரற்று கிடந்த அந்த டப்பாக்களை திறந்துபார்த்தபோது அதில் கருச்சிதைவு செய்யப்பட்ட சிசுக்களின் சடலங்கள் இருந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/djxtqmT

Post a Comment

0 Comments