
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் நடைபாதை கடைகளை நேற்று அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பல ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்துவரும் நடைபாதை கடைகளை கடந்த மாதம் 13-ம் தேதி நகராட்சி ஆணையர் தலைமையில் காவல்துறை உதவியோடு அகற்றினர். அதே இடத்தில் அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TZwVBxQ
0 Comments