
சென்னை: வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக கிறிஸ்தவ பெண் மத போதகர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காட்ப்ரே நோபுள். பேராயரான இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மரியாசிஸ்டர் என்பவர், என் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். நீங்களும் பேராயர், நானும் மத போதகர். உங்கள் மூத்த மகனுக்கு, கிரீஸ் நாட்டில் வேலை வாங்கி தருகிறேன் என கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jwhtlWP
0 Comments