
புதுச்சேரி: திருச்சி துறையூர் கோணபாதை பகுதியைச் சேர்ந்தவர் விஜய குமார் (45), லாரி ஓட்டுநர். சில மாதங்களுக்கு முன்பு இவர் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டைக்கு லாரியில் லோடு ஏற்றி வந்தார்.
அப்போது 3 பைக்குகளில் வந்த 6 இளைஞர்கள் விஜயகுமா ரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறிக்க முயன்றனர். அவர் தர மறுத்ததால் கத்தியால் வெட்டிவிட்டு செல்போனை பறித்துச் சென்றனர். காயமடைந்தஅவர் அருகிலுள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LjE3rVW
0 Comments