
சென்னை: சென்னை - மயிலாப்பூரில் தம்பதியைக் கொன்று புதைத்து நகைகள், காருடன் தப்பிச் சென்ற கார் ஓட்டுநர், அவரது நண்பரை போலீஸார் 6 மணி நேரத்தில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள ஆயிரம் பவுன் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் மீட்கப்பட்டன.
சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60). தொழிலதிபரான இவர், குஜராத் மாநிலத்தில் ஐ.டி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி அனுராதா (55). இவர்களுக்கு சுனந்தா என்ற மகளும், சஸ்வத் என்ற மகனும் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mlB5xuw
0 Comments