
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் நிலமேல் பகுதியைச் சேர்ந்தவர் திரிவிக்கிரமன். இவரது மகள் விஸ்மயாவுக்கும் (22), சாஸ்தாங்கோட்டையைச் சேர்ந்த கிரண்குமாருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
கிரண்குமார் கேரள அரசின் மோட்டார் வாகன உதவி ஆய்வாளராக இருந்தார். விஸ்மயா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. திருமணத்தின்போது கிரண்குமாருக்கு வரதட்சணையாக ஒன்றே கால் ஏக்கர் நிலம், 100 சவரன் தங்க நகைகள், பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான கார் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் தனக்கு வழங்கிய கார் பிடிக்கவில்லை என்றும் புதிதாக வேறு கார் வாங்குவதற்கான தொகையை கூடுதல் வரதட்சணையாக வாங்கிவரச் சொல்லி விஸ்மயாவுக்கு கிரண்குமார் நெருக்கடி கொடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vOWaADq
0 Comments