Crime

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே கிராம ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கு காரணமான புகாரில் திமுக கவுன்சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமநாயினிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (39). இவர், அதே கிராமத்தில் கடந்த 13 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவர், வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது நேற்று முன்தினம் இரவு தெரியவந்தது. இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ராஜசேகர் எழுதி வைத்த கடிதம் ஒன்றை பறிமுதல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BiKnbRk

Post a Comment

0 Comments