
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள காலணி விற்பனை கடையின் முன்புறம் உள்ள நடைபாதையில் 5-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் இரவு உறங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். அப்போது, மற்றொரு பெண் அவரை தடுத்த போது அவ ருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இதையடுத்து கையில் கத்தியுடன் இருந்த நபரை சுற்றிவளைத்துப் பிடித்தனர். படுகாயங்களுடன் இருந்த 2 பெண்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற ஆம்பூர் நகர காவல் துறையினர் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபரை மீட்டு விசாரித்தனர். அதில், அவர் திருவண்ணாமலை இந்திரா நகரைச் சேர்ந்த மாடு வியாபாரி தேவேந்திரன் (45) என்றும் கத்திக்குத்து காயம்பட்டவர்கள் ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த கெளசர் (27) மற்றும் தேவேந்திரனின் மனைவி தனலட்சுமி (30) என்பதும் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tvi7q1Y
0 Comments