Crime

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு மது விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது. செல்போன் செயலி மூலம் பதிவு செய்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர் 900 பேர் இதில் கலந்து கொண்டனர். பிரேசிலைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற மந்த்ரா கோரா என்பவரின் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.1,500 வசூலிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகத்தின் 4-வது மாடியில் நடைபெற்ற மது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றோர் பல்வேறு வகையான மதுபானங்களைக் குடித்துவிட்டு, போதையில் உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.

இதில், சென்னை மடிப்பாக்கம் ஜோதி ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த பிரவீன்(23) என்பவர், தனது நண்பர்கள் நீக்கல், ஐஸ்வர் ஆகியோருடன் பங்கேற்றுள்ளார். மென் பொறியாளரான இவர், இசை-பாடலுக்கு தகுந்தவாறு ஆட்டம் போட்டுள்ளார். திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/opz6A0e

Post a Comment

0 Comments